ஆராவமுதே சாரங்கபாணி
ராகம்: சாரங்கா
ஆராவமுதே சாரங்கபாணி
காணத் திகட்டாத சாரங்கா ... ( ஆராவமுதே )
நல்லவரை காக்க அவதாரம் பல எடுத்தாய்
மறைந்த தமிழ் மறையை உலகுக்கு தந்தாய்
ஸ்ரீதேவியை மணக்க தேரில் அவனி வந்தாய்
கருணை வெள்ளம் பொங்க அடியோரை நோக்கிடும் ... ( ஆராவமுதே )
திருமலையில் நின்றிடும் ஸ்ரீனிவாசன் நீயே
குடந்தை நகரில் அயர்ந்தவன் நீயே
திருமழிசையாழ்வார் வந்திடும் வேளையில்
எழுந்திடும் நிலையில் சேவை சாதிக்க
ஆழ்வார் அழைத்த ஆராவமுதே
காணத் திகட்டாத சாரங்கா ... ( ஆராவமுதே )
Click Here for AUDIO (under construction)