நாளை நாளை
ராகம்: ரேவதி
நாளை நாளை என நாள் கடத்தாமல்
இப்போதே திருமலை அடை மனமே .... நாள் கடத்தாமல் ..
ஒரு முறை திருமலை சென்று வந்தால்
கோவிந்தன் மனதினில் நிறைந்திடுவான்
கலியுக வரதனாம் வேங்கடவன்
பதமலர் பணிந்திட செல் மனமே ... ( நாளை )
சங்கு சக்ரதர நித்ய மங்களன்
அலர்மேல் மங்கை உறை மணிமார்பன்
அபய கரத்தால் அவன் காட்டிய
திருவடி பணிந்திட செல் மனமே ... ( நாளை )
Click Here for AUDIO (under construction)