ரகுகுல திலகனே
ராகம்: சுத்த தன்யாசி
ரகுகுல திலகனே சீதை மணாளனே
நான் தினம் வணங்கும் ராமச்சந்த்ரனே ... ( ரகுகுல )
பசுமை நிறைந்த வயல்களின் நடுவே
காற்று புகுந்து ராமா என்றொலிக்க
பறவைகள் வானில் ராகவா என்றழைக்க
திருவெள்ளியங்குடியில் பள்ளி கொண்ட ராமா ... ( ரகுகுல )
ஒளி இழந்த வெள்ளி மீண்டும் ஒளி அடைய
பார்வை இழந்த சுக்ரன் பார்வை கிடைத்திட
அருள் மழை பொழியும் வேங்கடவனை
திருவெள்ளியங்குடியில் சயனத்தில் கண்டேனே ... ( ரகுகுல )