ஸ்ரீனிவாசனுக்கு நிகர உண்டோ
ராகம்: ஹிந்தோளம்
ஸ்ரீனிவாசனுக்கு நிகர் உண்டோ பாரில்
மலர்மகள் மணாளனை சேவிப்போம் வாரீர் .... ( ஸ்ரீனிவாசனுக்கு )
கோவிந்தா என்றழைத்தால் போதும்
இடர்கள் தீர்க்கும் அத்திரு நாமம் .... ( ஸ்ரீனிவாசனுக்கு )
நாரயணனே நான்முகனை படைத்தான்
நான்முகன் மூலமாய் மானிடரைப் படைத்தான்
கலியுகத்தில் மானிட குலம் செழிக்க
திருவேங்கடம் நின்று நாளும் அருள் செய்யும் .... ( ஸ்ரீனிவாசனுக்கு )
Click Here for AUDIO (under construction)