உன்னை காண கண் கோடி வேண்டுமே
ராகம்: ஆனந்தபைரவி
உன்னைக் காண கண் கோடி வேண்டுமே
ஆனந்த நிலய வாசா ஸ்ரீனிவாசா .... ( உன்னை )
பாரெல்லாம் புகழும் உத்தமனே உன்னை
நாடி வரும் பக்தர்க்கு முக்தி தரும் ... ( உன்னை )
உன் நெற்றியின் நாமம் என்னை கவர்ந்திழுக்க
உன் திருமுக மண்டலமோ என்ன களிப்பினில் ஆழ்த்த
பவளத்திருவாயில் புன்சிரிப்போடு நின்ற
கோலத்தில் உன்னை கண்டிட எனக்கு .... ( காண கண் )
மூன்றடி நிலம் கேட்டு மூவுலகம் அளந்தாய்
அரக்கர் குலம் அழிக்க இராமனாய் பிறந்தாய்
தருமம் நிலைத்திட கண்ணனாய் அவதாரம் கொண்டாய்
கலியுக வரதா வேங்கடவாணனே .... ( உன்னை )
Click Here for AUDIO (under construction)