யதுநந்தன மதுசூதன
ராகம்: நாட்டை
யதுநந்தன மதுசூதன வாசுதேவா லோகரக்ஷகா
தேவகி நந்தன கோகுல பாலா மதுராபுரி நகர் நாயகா .... ( யது )
மலையை குடையாய் எடுத்தவனே
காளிங்க நர்த்தனம் புரிந்தவனே
தீயனாம் கம்சனை மாய்த்தவனே
பூமியை காத்திட வந்தவனே கண்ணா .... ( யது )
பார்த்தனுக்கு தேரோட்டி சாரதியானாய்
அறநெறி வாழ்விற்கு கீதையை தந்தாய்
உலகினில் நன்மை என்றும் விளங்கிட
திருவேங்கடம் நின்று நாளும் அருள் செய்யும் ... ( யது )
Click Here for AUDIO (under construction)